தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சோகம்; பாஜக புள்ளி மனவேதனையில் மாரடைப்பு மரணம்.!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சோகம்; பாஜக புள்ளி மனவேதனையில் மாரடைப்பு மரணம்.!



BJP MP Candidate Opposite Result ends Man Life 


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருபவர் ராஜவீர் சிங் திலர். இவர் பாஜக சார்பில் அத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக 2019 தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். 

தற்போது 2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் ஹத்ராஸ் தொகுதிக்கு மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட ராஜவீர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இறுதியில் அனூப் வாலமீகி என்பவர் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பை வழங்கவே, அன்றில் இருந்து அவர் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராஜவீர் நெஞ்சை பிடித்து மயங்கியுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதியானது.