விஜய் சேதுபதியின் 51வது படம்.! ரசிகர்களை கவர்ந்த டைட்டில் டீசர்.! இதோ..
பா. ரஞ்சித் தயாரிக்கும் படத்தில், இயக்குனராக மாரி செல்வராஜ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் திரையுலகில் மிகக் குறைந்த படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், மக்களின் மனதில் இருந்த தாக்கத்தை வெளிக்கொணர்ந்த இயக்குநர்களாக அடையாளம் பெற்றுள்ள பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் வெவ்வேறு கோணங்களில் இருந்து பணியாற்றி வந்தனர்.
இதில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விரைவில் தங்கலான் திரைப்படம் வெளியாகிறது.
மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இருவரும் ஒன்றிணைந்து படம் தயாரிப்பாளர்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், நீலம் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் படத்தில், மாரி செல்வராஜ் இயக்குனராக களமிறக்கப்படுகிறார். இப்படத்தின் அறிவிப்பு மே 06 ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.