கரையில் மின்னும் ரிப்பன் போன்ற நீண்ட உடலமைப்பை கொண்ட அறிய மீன்... ஆழ்கடலில் இருந்து வந்த ஆபத்தான அறிகுறியா ? வைரலாகும் பகீர் காட்சி!!!
ஆழ்கடலில் மட்டுமே வாழக்கூடிய அரிய கடல் உயிரினங்கள் சில நேரங்களில் கடற்கரைக்கு அருகில் தோன்றும் சம்பவங்கள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில் மெக்சிகோவில் ஏற்பட்ட இதுபோன்ற ஒரு நிகழ்வு இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக ஓர்ஃபிஷ் எனப்படும் அரிய வகை மீன் கரைக்கு அருகில் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மெக்சிகோ கடற்கரையில் அரிய மீன்
மெக்சிகோ நாட்டின் கபோ சான் லூகாஸ் கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வாழும் இந்த விசித்திரமான மீன்கள் திடீரென கரைக்கு மிக அருகில் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினங்கள் மேற்பரப்பிற்கு வருவது மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது.
சகோதரிகள் கண்டுபிடித்த சம்பவம்
அந்த கடற்கரையில் இருந்த இரண்டு சகோதரிகள் தண்ணீரில் ஏதோ மின்னுவது போல் தெரிந்ததை கவனித்து அருகில் சென்றனர். அப்போது ரிப்பன் போன்ற நீண்ட உடலமைப்பைக் கொண்ட இந்த மீன்கள் ஆழமற்ற நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். பின்னர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டு அந்த மீன்களை மீண்டும் கடலின் ஆழப் பகுதிக்குள் வழிநடத்தினர்.
இதையும் படிங்க: அய்யோ... ஆபத்து! ஒத்த இறைச்சி துண்டை வைத்து மொத்தமாக மீன்களை அள்ளிய மீனவர்! அதிர்ச்சியாக்கும் மீன்பிடி வீடிய!!!
வைரலான வீடியோ
இந்த மனிதாபிமான முயற்சியின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் வேகமாக பரவியது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘டூம்ஸ்டே மீன்’ என்ற நம்பிக்கை
இந்த மீன்கள் சில பகுதிகளில் டூம்ஸ்டே மீன் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மீனவர்கள் இதை ‘துடுப்பு மீன்’ என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் இந்த மீன்கள் கரைக்கு வருவது நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.
விஞ்ஞானிகள் விளக்கம்
ஆனால் இந்த மீன்களின் தோற்றத்துக்கும் இயற்கை பேரிடர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது உடல்நல காரணங்களால் இத்தகைய மீன்கள் சில நேரங்களில் மேற்பரப்பிற்கு வரக்கூடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியிருந்தாலும், ஆபத்து இருக்கலாம் என்ற அச்சத்தையும் மீறி அரிய கடல் உயிரினங்களை பாதுகாக்க அந்த பெண்கள் எடுத்த முயற்சி பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. மனிதாபிமானமும் இயற்கை பாதுகாப்பும் இணைந்த இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்ற நிகழ்வாக மாறியுள்ளது.
Two massive deep-sea oarfish recently washed ashore in Cabo San Lucas, Mexico.
According to legend, this rare creature, often called the “doomsday fish,” only rises from the depths of the ocean when a major disaster is about to happen. pic.twitter.com/BcQfMNnkdh
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 9, 2026
இதையும் படிங்க: பீதியில் மக்கள்! மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய 3,000 அடி ஆழத்தில் வாழும் மர்ம மீன்! மூன்றாம் உலக போர் ஆரம்பமா? அச்சத்தில் உலக நாடுகள்!!!