இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.! 



in Maharashtra 14 Year Old Girl Gang Raped

சமூக வலைத்தளத்தில் கிடைத்த பழக்கத்தால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விபரீதத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

இன்ஸ்டாகிராம்: 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: 22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.! 

சாட்டிங்: 

இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசி வந்த நிலையில், கடந்த 11 ம் தேதி சிறுவன் சிறுமியிடம் தனியாக சந்தித்து பேசலாம் என ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். காதலனின் அழைப்பின் பேரில் சிறுமியும் நேரில் சென்றுள்ளார். 

பலாத்காரம்: 

சிறுமியாக தயாராக கூட்டாளியுடன் காத்திருந்த சிறுவன், அங்குள்ள மறைவான பகுதிக்கு சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். 

sexual abuse

வீடியோ: 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதாகவும் கூறப்படும் நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவருக்கு இதுதொடர்பான தகவல் கிடைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது அவர் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். 

கைது: 

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சிறார்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் கொடூரம்..!