இந்தோனேஷியாவில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவு.! 

இந்தோனேஷியாவில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவு.! 



indonesia-earthquake-today-31-dec-2023

 

இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சமீபத்தில் அதிக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. 

இது மக்களிடையே அச்சத்தை தரும் வகையில் இருந்தாலும், நூற்றுக்கணங்கள் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகின்றன. 

இந்நிலையில், ஆண்டில் இறுதி நாளான இன்று இந்தோனேசியாவில் அதிகாலை பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகளில் 6.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியபடி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் அங்குள்ள பப்புவா நியூ கயானா தீவில் பிரதானமாக உணரப்பட்டுள்ளது. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.