அபுதாபியில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு! தலைக்கு மேல் பறந்து செல்லும் ஏவுகணைகள்...எப்போது வீடு திரும்புவோம்..? இந்திய இளையர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ..!!



indian-crew-stranded-abu-dhabi-israel-iran-war-tension

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர்ப் பதற்றம் உலக நாடுகளை மட்டுமல்ல, அங்கு வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களையும் நேரடியாக பாதித்து வருகிறது. இந்த சூழலில் அபுதாபியில் சிக்கியுள்ள இந்திய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் சிக்கிய இந்திய கேபின் குரூ

ஆஷு அரோரா என்ற இந்திய இளைஞர், பெங்களூரு செல்லும் விமானத்தில் கேபின் குரூவாக பணியாற்றி வருகிறார். ஒரு குறுகிய இடைவேளைக்காக அபுதாபியில் தங்கியிருந்தபோது, திடீரென போர் சூழ்நிலை தீவிரமடைந்ததால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவர் அங்கேயே சிக்கிக்கொண்டார்.

"நிலைமை மிகவும் மோசம்" – வீடியோவில் பகிர்வு

தனது வீடியோவில் அங்குள்ள நிலவரத்தை விளக்கிய ஆஷு, ஊடகங்களில் வெளியாகும் தகவல்களைவிட தரைமட்டத்தில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளார். அபுதாபி நகரின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் பரபரப்பாக அலைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது தலைக்கு மேல் ஏவுகணைகள் பாய்ந்து செல்வதை நேரில் கண்ட அனுபவம் மிகவும் பயங்கரமாக இருந்ததாக அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பயங்கர தள்ளுமுள்ளு... போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்! பரபரப்பு வீடியோ!

விமான நிலையங்களில் தவிக்கும் இந்தியர்கள்

இந்த வீடியோ வைரலானதையடுத்து, அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், விமானங்களை இயக்குவதில் கடுமையான சிக்கல்கள் தொடர்கின்றன.

வெளியுறவு அமைச்சகத்துக்கு கோரிக்கை

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை விரைவில் தாயகத்துக்கு அழைத்து வர இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த அவசர நிலைமை, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சூழ்நிலை சீராகும் வரை அங்கு உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதே தற்போதைய நிதர்சனம்.

 

இதையும் படிங்க: அஜித் பவார் மகன் வெளியிட்ட வீடியோவால் நாடே அதிர்ச்சி! நடு வானில் பறந்த விமானம்.... அசந்து தூங்கிய பைலட்! தந்தையை இழந்த வேதனையில் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன் வைப்பு!!!