வெள்ளத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர்! சாதூர்யமாக செயல்பட்ட இளம்பெண்.... வைரலாகும் வீடியோ!!!
இமாச்சலப் பிரதேசத்தின் சாம்பா மாவட்டத்தில் கனமழையால் சாலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கித் தத்தளித்த பைக் ஓட்டுநரை புதுமணப் பெண் ஒருவர் துப்பட்டாவை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுள்ளார். அவரது சமயோசிதமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெள்ள நீரில் சிக்கிய பைக் ஓட்டுநர்
சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த வெள்ள நீரில் பைக் ஓட்டுநர் நிலைதடுமாறினார். நீரோட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற குடும்பத்தினர் இதைக் கவனித்து உடனடியாக வாகனத்தை நிறுத்தினர்.
இதையும் படிங்க: மூன்று மணிநேர மனப்போராட்டம்! ஒருபுறம் நீட் தேர்வு... மறுபுறம் நேபாள வெள்ளத்தில் பெற்றோர்.... நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்...!!!
காரில் இருந்த ஒருவர் வெள்ளத்தில் இறங்கி ஓட்டுநருக்கு உதவ முயன்றார். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் அருகில் செல்ல முடியவில்லை.
துப்பட்டாவை நீட்டி மீட்ட புதுமணப் பெண்
நிலைமை மோசமடைவதை உணர்ந்த காரில் இருந்த புதுமணப் பெண், சிறிதும் தாமதிக்காமல் தனது துப்பட்டாவை நீட்டி பைக் ஓட்டுநரைப் பிடிக்குமாறு கூறினார். அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட ஓட்டுநரை, அந்தப் பெண்ணும் உடன் வந்த நபரும் சேர்ந்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
ஆபத்தான சூழலில் துணிச்சலுடன் செயல்பட்ட அந்தப் பெண்ணின் சமயோசிதமான செயல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பலரும் அவரது தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.
நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
சாம்பா மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், கிடைத்த தகவலின்படி பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
📍 Chamba — A family travelling in their vehicle noticed a biker struggling for his life, stuck at the edge of the road with his bike, and immediately stepped in to help.
— The Modern Himachal (@themodernhp) August 31, 2026
The video is reportedly from the Banikhet side.
The monsoon in the hills can turn dangerous within moments.… pic.twitter.com/Gp1JomReko
இதையும் படிங்க: நேபாளத்தை உலுக்கிய பனிப்பாறை முறிவு! பயங்கர எச்சரிக்கையில் சிக்கிம்... ஆபத்தான 16 ஏரிகளில் நவீன சென்சார்கள்!!! இமயமலைப் பேரழிவின் பின்னணி..!!!