மனைவி உட்பட 12 பெண்களிடம் பாலியல் அரக்கனாக செயல்பட்ட காவல் அதிகாரி.. நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்.!

மனைவி உட்பட 12 பெண்களிடம் பாலியல் அரக்கனாக செயல்பட்ட காவல் அதிகாரி.. நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்.!


England Ex Police Officer David Carrick Wife says He is Monster Sex Salve

தனது கணவர் எப்படியெல்லாம் தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார் என காவலரின் மனைவி செய்தியாளர்களிடம் கூறிய தகவல் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. செக்ஸ் சைக்கோவுடன் குடும்பம் நடத்தி குமுறிய பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இங்கிலாந்தில் உள்ள இலண்டனில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் டேவிட் காரிக் (David Carrick). இவரின் மனைவிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். காவல் அதிகாரியாக இருந்த டேவிட், தனது மனைவியை பாலியல் ரீதியாக பல கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், 12 பெண்களையும் பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக டேவிட்டின் மனைவி இங்கிலாந்தில் உள்ள Daily Mail Online இதழுக்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில், "நான் அவரை இரவு நேர பார்ட்டியில் சந்திட்டேன். அவர் முதலில் என்னுடன் அன்பாக, என் மீது அதிகம் பாசம் வைத்திருக்கும் நபராக இருப்பதை போல நடித்தார். என்னை கொஞ்சம் கொஞ்சமாக அவரின் அன்புக்கு கீழ் கொண்டு வந்தார். நான் அவருடன் சேர்ந்து வாழ தயாரான பின்னர், அவரின் பாலியல் செயல்பாடுகள் மாற்றம் அடைந்தது. முதலில் கணவர் ஆர்வக்கோளாறுத்தனமாக செயல்படுகிறார் என நினைத்தேன். 

ஆனால், அவரின் செயல்பாடுகளை சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவரின் உண்மையான குணம் வெளியானது. என்னை பாலியல் ரீதியாக கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கிய அவர், பாலியல் அரக்கனை போல நடந்துகொண்டார். சில நேரங்களில் என்னை நிர்வாணப்படுத்தி அலமாரியில் அடைத்து வைப்பார். வீட்டை சுற்றிலும் நிர்வாணமாக நடந்து வர அடித்து துன்புறுத்துவார். என்னையும், எனது 2 மகள்களையும் வேசிகள் என்று கூறுவார். 

England

கணவரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், அவருக்கு எதிராக புகார் அளிப்பேன் என கூறியபோது காவல் துறை அதிகாரியான என் மீது நீ புகார் கொடுத்துவிட்டு எங்கு செல்வாய்? உன்னை வாழவிட்டுவிடுவேனா? என மிரட்டி என்னை பாடியவைத்தார். எனது கைகளில் கைதியின் விலங்குகளை கட்டி, பயங்கர ஆயுதத்தால் என்னை அடித்து பாலியல் சித்ரவதை செய்வார். 

அவர் குறித்து எனக்கு இருந்த பயம் நீண்டுகொண்டே சென்றதால் புகார் அளிக்கவும் தயங்கினேன். அவர் மீது பெண்மணி ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் 12 பாலியல் குற்றசாட்டுகள் அம்பலமாகின. அதனால் அவரின் மனைவியாக ஓராண்டு நான் அனுபவித்த துன்பங்களும் ஏராளம். அதனை இன்று நினைத்துப்பார்த்தாலும் உடல் நடுங்குகிறது. என் மீது சிறுநீர் கழித்தெல்லாம் கடுமை செய்திருக்கிறார்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தற்போது அந்த அதிகாரி சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.