தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?



actor-rajesh-built-his-own-tomb-at-age-40

40வது வயதில் தனக்கே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ் – இப்போது வைரலாகும் அரிய தகவல்

பழம்பெரும் நடிகரும், தமிழ் சினிமாவின் மென்மையான முகங்களுள் ஒருவருமான நடிகர் ராஜேஷ், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ராஜேஷ் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் – ராஜேஷ் தன் உயிருடன் இருக்கும்போதே, அதுவும் 40வது வயதில், தனக்கென கல்லறை கட்டி வைத்திருந்தார்.

ஏன் இந்த முடிவை எடுத்தார்?

ஒரு பேட்டியில் ராஜேஷ் இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அவர்  கூறியது

“சினிமாவில் சில நேரங்களில் நடிகர்கள் இறந்துபோல் நடிக்கிறார்கள். பின்னர், அந்த போஸில் சிரிப்பாக படமெடுத்து வைத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் என்ன நேரிடும் என்று தெரியாது. அதனால் தான், என் விருப்பப்படி, என் கல்லறையை நானே கட்டிவைத்தேன்.”

இதையும் படிங்க: அதிர்ச்சியில் திரையுலகம்! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ராஜேஷ் திடீர் மரணம்!

இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; அவர் ஒரு முக்கியமான நபரிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். ஜிஆர்பி விஸ்வநாதன் என்பவர் தான் அவருக்கு இந்தத் சூட்சத்தை கொடுத்தாராம். விஸ்வநாதனும் தன் இறப்பிற்கு முன்னமே கல்லறை கட்டிவைத்திருக்கிறார். அவரது மரணம் அந்த கட்டிடம் நின்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்ததாகும்.

RIP Rajesh

மரபுகள், பழமொழிகள், மற்றும் நம்பிக்கைகள்

ராஜேஷ் இந்த முடிவை எடுப்பதற்கான இன்னொரு காரணம் – ஒரு

சீனப் பழமொழி:

“தனக்காக கல்லறை கட்டும் நபர், 100 ஆண்டுகள் வாழ்வான்.”

இதையே நம்பிக்கையாக எடுத்துக்கொண்ட அவர், 40வது வயதில் தனது கல்லறையை கட்டினார். ஆரம்பத்தில் மார்பிளில் கட்டிய அவர், அது 25 ஆண்டுகளில் இடிந்து போனதால் பின்னர் கிரானைட் கல்லை கொண்டு புது கட்டடம் அமைத்தார்.

குடும்பத்திற்கும் பாசமும்

தன் மரணத்திற்கு பிறகு மகனோ மகளோ தன்னுடைய விருப்பங்களை அறிய வாய்ப்பில்லை என்பதால், தனக்கு பிடித்த வடிவில், வேண்டிய வாசகங்களோடு கல்லறையை அமைத்தார். என்ன எழுதியிருக்க வேண்டும் என்பதையும் அவரே தேர்வு செய்தார்.

ஹாலிவுட் குட்டி கதையும் சொல்லியுள்ளார்

அந்த பேட்டியில், ஒரு ஹாலிவுட் கதையையும் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நடிகை மறைந்த பிறகு, மறுபிறவியாக அமெரிக்காவிற்கே வந்து, முன்னாள் பிறவியின் கல்லறைக்கு சென்று, ஜாடியில் இருந்த சாம்பலை எடுத்துக் கொண்டாள் என்ற கதை. இந்த கதையை சொல்லி, “நான் என் கல்லறையை உயிருடன் இருக்கையில் பார்த்துவிட்டேன்” என்றார் ராஜேஷ்.

35 ஆண்டுகள் வாழ்ந்தார் 

அவர் இந்த கல்லறையை கட்டிய பிறகு மொத்தம் 35 ஆண்டுகள் மேலும் வாழ்ந்திருக்கிறார், என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

 

இதையும் படிங்க: கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....