AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
ஒரே கேலி, கிண்டல்! 20 தையல்.. ஆண் நண்பருடன் பேசியதால் 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பிளேடால் வெட்டிய மாணவிகள்! அதிர்ச்சி வீடியோ...
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிளேடு தாக்குதல் சம்பவம் கல்வி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ரோகிணி பகுதியில் நடந்த இந்த தாக்குதல் பெற்றோர்களும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ரோகிணியில் அதிர்ச்சி சம்பவம்
ரோகிணி பகுதியில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவி, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பள்ளியின் மாணவிகள் நால்வர் அவரை எதிர்த்து நின்று தாக்கினர். பிளேடால் கீறியதால், மாணவியின் முகம் மற்றும் முதுகில் தீவிர காயங்கள் ஏற்பட்டன.
மருத்துவ சிகிச்சை
உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில், காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். மாணவியின் நிலைமை தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது.
இதையும் படிங்க: புகழ்பெற்ற அருவியில் ஏறிய வாலிபர்! கால்வழுக்கி கண்ணிமைக்கும் நொடியில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து விழுந்து! பதறவைக்கும் வீடியோ காட்சி..
தாக்குதலின் காரணம்
போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கும், தாக்குதல் நடத்திய மாணவிக்கும் இடையே ஒரு மாணவனுடன் பேசியதற்கான வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கேலி, கிண்டல் நிலை அதிகரித்து தாக்குதலாக மாறியது.
கைது செய்யப்பட்டவர்கள்
இந்த சம்பவத்தில் 16 வயதுடைய இரண்டு மாணவிகள் மற்றும் 14 வயது மாணவி தாக்குதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. மூவரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் இடையேயான சிறிய வாக்குவாதம் கூட கடுமையான குற்றச்செயல் நிலைக்கு தள்ளப்படுவதால், பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகிறது.
दिल्ली के रोहिणी जिला अमन विहार थाना इलाके के रोहिणी सेक्टर 20 लाल बिल्डिंग स्कूल के छात्र को लड़कियों ने एक लड़की हे गाल और कंधे पर मारा नुकीली चीज लड़की घायल CCTV आया सामने @CPDelhi @LtGovDelhi @CMODelhi @PMOIndia @dcprohinidelhi @HMOIndia pic.twitter.com/Bl3br2rtIj
— journalist PRINCE JAISWAL (@JournalistPRIN3) September 11, 2025
दिल्ली के रोहिणी जिला अमन विहार थाना इलाके के रोहिणी सेक्टर 20 लाल बिल्डिंग स्कूल के छात्र को लड़कियों ने एक लड़की हे गाल और कंधे पर मारा नुकीली चीज लड़की घायल CCTV आया सामने @CPDelhi @LtGovDelhi @CMODelhi @PMOIndia @dcprohinidelhi @HMOIndia pic.twitter.com/Bl3br2rtIj
— journalist PRINCE JAISWAL (@JournalistPRIN3) September 11, 2025
இதையும் படிங்க: பள்ளிக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன்! திடீரென மயங்கி விழுந்த நொடியில் மரணம்! விழுப்புரத்தில் பெரும் சோகம்...