நள்ளிரவில் கதவைத் திறந்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு கதறல்..... இன்னொரு பக்கம் மகன்! 24 மணி நேரத்தில் 5 பேர்... அதிர்ச்சி சம்பவம்..!!!



delhi-govindpuri-mother-son-murder-robbery

டெல்லி கோவிந்தபுரியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கொடூரமாகக் குத்திக்கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்காஜி அருகே நடந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தகவலின்படி, கோவிந்தபுரி தெரு எண் 10 பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு சாஹு. இவர் வாராந்திர சந்தைகளில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அவரது மனைவி சாரதா சாஹு (38) மற்றும் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகன் வீட்டில் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!

நள்ளிரவில் வீட்டில் கண்ட அதிர்ச்சி

வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் விஷ்ணு சாஹு வீட்டிற்கு திரும்பியபோது, முன் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மனைவியும் மகனும் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, இரவு 1.11 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டெல்லி போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீட்டை முழுமையாக ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனர்.

அலமாரி உடைத்து நகை, பணம் கொள்ளை

விசாரணையின் போது வீட்டிலிருந்த அலமாரி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, கொள்ளை நோக்கிலேயே இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடல்

சம்பவத்தைத் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் பல பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: சிவகங்கையில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! மாலையில் ஆடுகள் மட்டும் திரும்பிய நிலையில்.... மாணவியை தேடிய பெற்றோர்கள்! ஊருணித் தண்ணீரில் கண்ட அதிர்ச்சி...!!!