இந்தியாவிற்குள் பரவிய உயிரைப் பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ்! அதுவும் எங்கெங்கு தெரியுமா?

இந்தியாவிற்குள் பரவிய உயிரைப் பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ்! அதுவும் எங்கெங்கு தெரியுமா?



corono-virus-spread-in-india

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் சீனாவில் 41 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் 1300க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா,  ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் உயிரைப் பறிக்கும் இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இருப்பதாக புனே  மருத்துவத்துறை உறுதி செய்துள்ளது.

Coronovirus

அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய  80 பேருக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டதில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரும், பெங்களூரில் ஒருவரும்  கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.