30 ஆயிரம் உசுரு போச்சு..! கொத்து கொத்தாக உயிர்களை பழிவாங்கும் கொரோனா..! சிக்கி தவிக்கும் உலகநாடுகள்.!
30 ஆயிரம் உசுரு போச்சு..! கொத்து கொத்தாக உயிர்களை பழிவாங்கும் கொரோனா..! சிக்கி தவிக்கும் உலகநாடுகள்.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என உலகம் முழுவதும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாரபட்சம் இல்லாமல் தாக்கிவருகிறது கொரோனா.
கொரோனா பாதிப்பால் இதுவரை 30 ,000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனனர். இத்தாலி கொரோனாவால் பெரும் துயரங்களை சந்தித்துவருகிறது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தைத் தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500-த்தைத் தாண்டியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 838 ஆகும். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் 1,18,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில், 2,200 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.