ப்ளீஸ் திருந்துங்க.. இன்ஸ்டா, வாட்சப்பால் அழியும் இளம்தலைமுறையின் எதிர்காலம்; வாழ்க்கை.. மொபைல் யூஸ் பண்ணலைனா உயிரைவிடும் அபாயம்..!!
ப்ளீஸ் திருந்துங்க.. இன்ஸ்டா, வாட்சப்பால் அழியும் இளம்தலைமுறையின் எதிர்காலம்; வாழ்க்கை.. மொபைல் யூஸ் பண்ணலைனா உயிரைவிடும் அபாயம்..!!

இன்றுள்ள உலகில் செல்போன் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைத்த பல விஷயங்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் முழுங்கி கிடக்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் நிலையில், நாளொன்றுக்கு 15 நிமிடம் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்தாமல் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து பல்கலைக்கழக குழுவினர் 20 வயது முதல் 25 வயது வரை இருக்கும் 50 பேரிடம் மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் 15 நிமிடங்கள் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைத்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம், உளவியல் செயல்பாடுகள் முன்னேறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடம் உபயோகிக்காவிட்டால் தற்போதைய இளைஞர்கள் உயிரைவிட்டுவிடுவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே தயவுசெய்து இன்றைய கால இளம்தலைமுறையினர் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.