அப்பாவிற்கு ஆபீஸ்லிருந்து வந்த போன் கால்! எடுத்த பேசிய 5 வயது சிறுமி... அடுத்த 24 மணிநேரத்தில் சிஇஓ எடுத்த அதிரடி முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!!!
கொரோனா காலத்தில் தொடங்கிய Work From Home முறை, இன்று நிறுவனங்களுக்குள் புதிய மோதலாக மாறியுள்ளது. ஊழியர்களை அலுவலகம் வர வற்புறுத்தும் சூழலில், ஒரு குழந்தையின் பேச்சு ஒரு நிறுவனத்தின் கொள்கையை மாற்றிய சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு வேகமாக பரவி வருகிறது.
கோரிக்கை நிராகரிப்பு... குடும்பம் vs வேலை
தகவலின்படி, மனைவியின் உடல்நிலை சரியில்லாததால், ஒரு ஊழியர் தற்காலிகமாக வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதி கேட்டுள்ளார். ஆனால், நிறுவனத்தின் சிஇஓ அதனை நேரடியாக மறுத்ததாக கூறப்படுகிறது. வேலை பாதுகாப்பு ஒரு பக்கம், குடும்பப் பொறுப்பு மறுபக்கம் என அந்த ஊழியர் சிக்கலில் சிக்கியிருந்தார்.
இதையடுத்து, ஒருநாள் அவர் அலுவலகம் வராததால் சிஇஓ அவரைத் தொடர்பு கொண்டார். அப்போது அழைப்பை எடுத்தது அந்த ஊழியரின் ஐந்து வயது மகள். “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை… அப்பாவை வீட்டிலிருந்து வேலை செய்ய விடுங்கள்” என்று குழந்தை கேட்ட வார்த்தைகள் சூழ்நிலையை முற்றிலும் மாற்றியதாக கூறப்படுகிறது.
ஒரே அழைப்பில் மாறிய Work From Home கொள்கை
அந்த சிறுமியின் நேர்மையான கோரிக்கை சிஇஓ மனதை நெகிழ வைத்தது. அதன்பின், நிறுவனத்தின் அணுகுமுறையில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. மறுநாளே, அவசர சூழ்நிலைகளில் வீட்டிலிருந்து பணி செய்யும் வசதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முன்னர் கடுமையான விதிகளுடன் செயல்பட்ட நிறுவனத்தில், இந்த மாற்றம் ஊழியர்களுக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. ஒரு குழந்தையின் குரல், ஒரு நிறுவனத்தின் கடினமான கொள்கையையே தளர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
Corporate culture மீதான கேள்விகள்
இன்றைய கார்ப்பரேட் சூழலில், வேலை நேரத்தைத் தாண்டியும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது. பல இடங்களில் கூடுதல் நேரத்திற்கான ஊதியம் கூட வழங்கப்படாததாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால், வேலை இலக்குகள் மட்டும் அல்லாமல், ஊழியர்களின் மனநிலை மற்றும் குடும்ப சூழலையும் கவனிக்கும் நிறுவனங்களே நீண்ட காலத்தில் நிலைத்திருக்கும் என்பதைக் காட்டும் உதாரணமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.