பச்ச புள்ளையை வச்சு செய்யுற வேலையை பாருங்க..... வீட்டை திறக்க சகோதரர்கள் செய்த அதிர்ச்சி செயல்! அடுத்து நடந்த காட்சி...!!!
வேலை முடிந்து நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிய இரண்டு சகோதரர்கள், கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் வெளியே சிக்கிக்கொண்டனர். கையில் சாவி இல்லாததால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்த அவர்கள், உதவிக்காக தங்களது சகோதரியை தொடர்புகொண்டனர். அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உதவிக்கு வந்த சகோதரி
தகவலின்படி, வீட்டின் கதவு எதிர்பாராத விதமாக உள்ளே இருந்து பூட்டிக்கொண்டதால் இருவரும் வெளியே காத்திருந்தனர். இதையடுத்து அவர்களது சகோதரி அங்கு விரைந்து வந்தார். நிலைமையை பார்த்த அவர், வீட்டிற்குள் செல்ல ஒரு மாற்று வழியை யோசித்துள்ளார்.
வீட்டின் கதவுக்கு அருகில் சிறிய ஓட்டை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடைவெளி வழியாக பெரியவர்கள் செல்ல முடியாத சூழலில், தனது சின்னக் குழந்தையை கவனமாக உள்ளே அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அய்யோ...பார்க்கும்போதே பக்கு பக்குன்னு இருக்குதே! 5-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த குழந்தை! நொடியில் வந்த கடவுள்....வைரலாகும் வீடியோ!!!
சிறுமியின் சாமர்த்தியம்
உள்ளே சென்ற சிறுமி, எந்த பதற்றமும் இல்லாமல் நேராக கதவின் உள்பக்கப் பூட்டிடம் சென்று அதைத் திறந்துள்ளார். சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டதால் வெளியே காத்திருந்த மாமாக்கள் வீட்டிற்குள் செல்ல முடிந்தது.
இணையத்தில் கவனம் பெற்ற காட்சி
சாவி இல்லாத நிலையில் சிறுமி ஒருவரின் உதவியுடன் வீட்டின் கதவைத் திறந்த இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சிறுமியின் புத்திசாலித்தனத்தையும், குடும்பத்தினர் எடுத்த உடனடி யோசனையையும் பலரும் பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
اخوين كانوا عائدين من عملهم ليلا ليتفاجأوا بأن باب شقتهم انغلق عليهم من الداخل وماعندهم مفتاح لفتحه، وهنا اتصلوا بأختهم واستعاروا منها أداة صغيرة لا يمكن توقعها لمساعدتهما: pic.twitter.com/GCwGQh6ipg
— Saif (@diol2n) June 8, 2026
இதையும் படிங்க: கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கூலாக இருக்கான்.... சிலிண்டருக்குள் எக்குத்தப்பாக மாட்டிக்கிட்ட குழந்தை! வினோத மீட்புப் போராட்ட வீடியோ..!!!