கனடா: இந்திய மாணவர்கள் 5 பேர் சாலை விபத்தில் மரணம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
கனடா: இந்திய மாணவர்கள் 5 பேர் சாலை விபத்தில் மரணம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
சாலை விபத்தில் கனடாவில் பயின்று வந்த 5 மாணவர்கள் விபத்தில் பலியான சோகம் நடந்துள்ளது.
கனடா நாட்டில் உள்ள டொராண்டோ மாகாணத்தில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சனிக்கிழமையில் வேனில் பயணித்துள்ளனர். இவர்கள் பயணித்த வாகனம், எதிர்திசையில் வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 5 இந்திய மாணவர்கள் பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் பலியானவர்களின் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுதான், விபத்தில் பலியானது இந்திய மாணவர்கள் என்பது உறுதியானது. இதனையடுத்து, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கனடா இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.