எடுத்துச்செல்ல ஆள் இல்லாமல் அனாதையாக கிடக்கும் சடலங்கள்..! கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி சீரழியும் அமெரிக்கா.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை கொரோனா 1,999,822 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். அதில், 126,741 பேர் உயிர் இழந்துள்ளனர்.
உலகின் வல்லரசு நாட்களில் ஒன்றான அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நாட்டில் தினம் தினம் 1000 கும் அதிகமானோர் உயிர் இழந்து வருகின்றனர். இதுவரை 26,064 பேர் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனனர். அமெரிக்காவின் நியூயார்க் மகாணம் அதிகமான பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்துவருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மெக்சிகன் மகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் இழந்தவர்களின் சடலங்கள் கேட்பாரற்று கிடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெட்ராய்ட்டு நகரில் அமைத்துள்ள இந்த மருத்துவமனையில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் உடல்கள் காலியாக இருக்கும் அறைகளில் குளிரூட்டப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சுற்றி அங்கு வைக்கப்பட்டுள்ளது.