140 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார்! காரின் ஓட்டுனரை பார்த்தும் அதிர்ச்சியான போலீசார்!
140 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார்! காரின் ஓட்டுனரை பார்த்தும் அதிர்ச்சியான போலீசார்!
ஜெர்மனி நாட்டில் 8 வயது சிறுவன் ஒருவன் அவரது தாயின் காரை 140 கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவனின் தாய் அவரது காரை வெளியே நிறுத்தியுள்ளார். சிறுவர்களுக்கான பந்தைய காரை ஒட்டி பழக்கமுள்ள அந்த சிறுவன் தனது தாயின் காரை ஓட்ட ஆசைப்பட்டு அதை ஒட்டியுள்ளான்.
தனது காரை காணவில்லை என அந்த சிறுவனின் தாய் புகார் அளிக்க, 140 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓன்று சென்றுகொண்டிருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வீட்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அந்த காரை இயக்கியுள்ளான் அந்த சிறுவன்.
ஒருகட்டத்தில் சற்று பயத்தால் காரை ஒரு ஓரமாக நிறுத்தியுள்ளான், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 8 கிலோமீட்டர் அதிவேக பயணத்தில் அந்த சிறுவனுக்கோ, அந்த காருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.