பானிபூரி சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி.! பரிதாபமாக போன உயிர்.! அதிர்ச்சி சம்பவம்.!

பானிபூரி சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி.! பரிதாபமாக போன உயிர்.! அதிர்ச்சி சம்பவம்.!


young-women-died-after-eat-paani-poori

தமிழகத்தில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு ரோகிணி தேவிக்கு அவரது சகோதரர்கள் இருவர் பானிபூரி வாங்கி கொண்டு வந்துள்ளனர். 

அவர்கள் வாங்கிவந்த பானிபூரியை சாப்பிட்ட ரோகிணி தேவி சற்று நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் உடற்சோர்வு காரணமாக படுத்து தூங்கிய அவர் மறுநாள் காலையிலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் முடிவு செய்தனர். அப்போது திடீரென ரோகிணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Paani pooriஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மேற்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து ரோகிணியின் தந்தை, தனது மகள் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.