தோட்டத்தில் வேலை செய்த பெண்களிடம் ஆடையை அவிழ்த்து காட்டிய இளைஞர்கள்; அலறி அடித்து ஓடிய பெண்கள்..!!

தோட்டத்தில் வேலை செய்த பெண்களிடம் ஆடையை அவிழ்த்து காட்டிய இளைஞர்கள்; அலறி அடித்து ஓடிய பெண்கள்..!!


Young men who undressed the women who worked in the garden; The women who ran away screaming..

500 ரூபாய் தருவதாக கூறி, பெண்களை உல்லாசத்திற்கு அழைத்த போதை ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, தொண்டாமுத்தூர் அருகேயுள்ள, தென்னமல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தருண் பாலாஜி. இவருக்கு அங்கு எட்டு ஏக்கர் தோட்டம் உள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் அந்தத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று காலை 8 மணி அளவில், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களைப் பார்த்து, அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்கள், 500 ரூபாய் தருவதாக கூறி இடுப்புக்கு கீழே உள்ள ஆடையை அவிழ்த்து உள்ளனர்.

அதை பார்த்து அதிர்ந்து போன வட மாநில பெண்கள், உடனடியாக தோட்ட உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினரும் தோட்ட உரிமையாளரும் நன்கு வந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர், அந்த இளைஞர்கள் இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும், ரேஷன் கடை வீதியை சேர்ந்த முத்துக்குமார் (31) ஏகனூர் தோட்டம் நரசிபுரத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது.

இவர்கள் இரண்டு பேரும் ஜே சி பி இயந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாளையார் பகுதியில் கள் வாங்கி குடித்துவிட்டு, போதையில் பெண்களிடம் தவறாக நடந்துள்ளனர்.

தோட்ட உரிமையாளர், தருண் பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில், தொண்டாமுத்தூர் காவல்துறையினர் அந்த இரண்டு இளைஞர்கள் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.