கூடா நட்பு கேடாய் முடியும்.! எனக்கு மது வேண்டாம் என கூறிய நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்.!

கூடா நட்பு கேடாய் முடியும்.! எனக்கு மது வேண்டாம் என கூறிய நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்.!



young-boy-killed-his-friend-for-not-drink

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியை சேர்ந்தவர் ராமன். 41வயது நிரம்பிய இவர் கூலிவேலை செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், ராமன் சம்பவத்தன்று அழகியநகர் பகுதியில் உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் சாமுவேல் என்ற வாலிபர் மது வாங்கி கொண்டு வந்து ராமனை மது குடிக்க வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால் இதற்கு ராமன் எனக்கு மது வேண்டாம் என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் அவரை பிடித்து தள்ளியுள்ளார். இதில் ராமன் பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ராமனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக இறந்தார்.

Murderபோலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சாமுவேலை தேடுவதை அறிந்த அவர் குடும்பத்தினருடன் தலைமறைவானார். இதனையடுத்து சாமுவேல் கருங்கல் பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சாமுவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.