பொண்ணு பார்க்கத்தான் அப்பாவி மாதிரி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! ராமநாதபுரத்தில் நடந்த பகீர் சம்பவம்..

பொண்ணு பார்க்கத்தான் அப்பாவி மாதிரி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! ராமநாதபுரத்தில் நடந்த பகீர் சம்பவம்..



women-killed-father-in-law-who-misbehave-with-her

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த வினோபாராஜ் மற்றும் கனிமொழி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இதனால் கனிமொழி மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கனிமொழியின் மாமனார் முருகேசன் கனிமொழிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதுகுறித்து கனிமொழி தனது கணவரிடம் கூறவே, எனது தந்தை அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டார் என கணவன் மழுப்பலாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்தநிலையில், முருகேசனின் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கனிமொழி கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு மாமனாருக்கு உணவு கொடுக்கும்போது, குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் குருணை மருந்து இரண்டையும் கலந்துக்கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுவந்தநிலையில் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி மறுநாளே உயிரிழந்தார்.

முருகேசனின் மரணத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாதால், முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதேநேரம் தனது மாமனாரின் சாவுக்கு தான்தான் காரணம் என்பதையும் கனிமொழி யாரிடமும் கூறவில்லை.

ஆனால் தனது மாமனாரை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் கனிமொழி கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் நேற்று கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலமாக கொடுத்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே, கனிமொழி மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.