விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட்நியூஸ்!.. சிறப்பு ரயில் அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளவர்கள், பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவில்–தாம்பரம் இடையே இந்த சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து நாளை இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், தென்மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக சென்னை நோக்கி இயக்கப்படும். குறிப்பாக திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தாம்பரத்தை சென்றடையும் இந்த ரயிலில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு மற்றும் ரயில் இயக்க நேரம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: புரோட்டா மாஸ்டரின் பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்! 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில்.... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!!!!
இதையும் படிங்க: போடு வெடிய... ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000, வேட்டி, சேலை....! அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்...!!!