என் குடும்ப மானமே போச்சு.. காதல் திருமணம் செய்த மகளுக்கு, தந்தை செய்த பகீர் காரியம்.. அதிர்ந்துபோன காதலன்.!

என் குடும்ப மானமே போச்சு.. காதல் திருமணம் செய்த மகளுக்கு, தந்தை செய்த பகீர் காரியம்.. அதிர்ந்துபோன காதலன்.!


Viluppuram Gingee Love Married Girl Kidnap by Parents and Clear Head Hair

காதல் திருமணம் செய்த மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடன் அழைத்துச்சென்ற தந்தை, கோவிலில் வைத்து பெண்ணுக்கு மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது. இறுதியில், பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், வெண்மணியாத்தூர் பகுதியை சார்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவர் திண்டிவனம் பகுதியில் செயல்பட்டு வரும் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியை சார்ந்த 24 வயது பெண், பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. பெண்மணி சென்னையில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வந்த நிலையில், இவர்கள் 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகமாக இருந்தாலும், காதலுக்கு பெண்ணின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Viluppuram

இதனால் காதல் ஜோடிகள் வீட்டினை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த 9 ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். பின்னர், செஞ்சி அருகேயுள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் பெற்றோர், தங்களின் மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுடன் அழைத்து சென்றுள்ளார். 

இந்த விஷயம் யுவராஜுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், யுவராஜ் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அவர் செஞ்சி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

Viluppuram

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில், பெண்மணி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காலாப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மொட்டையடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், பெற்றோர்கள் தன்னை அழைத்து சென்று, முனீஸ்வரன் கோவிலில் வைத்து மொட்டையடித்து தெரியவந்தது. 

தென்பாலை கிராமத்தில் இருக்கும் உறவினரின் வீட்டில் பெண்ணை தங்கவைத்து இருக்கின்றனர். பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் அண்ணாமலை, பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், 3 பேரை தேடி வருகின்றனர்.