படுக்கையில் இரத்த வெள்ளத்தில் தாய்! குளியலறையில் இரத்த வெள்ளத்தில் மகன்! நடந்தது என்ன? பகீர் சம்பவத்தின் பின்னணி..



lajpat-nagar-double-murder-delhi

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு, இருவர் கொல்லப்பட்ட இரட்டைக் கொலை சம்பவம் நகரமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானி மற்றும் அவரது 14 வயது மகன் கிரிஷ், தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் அன்று இரவு 9.30 மணிக்கு, வேலை முடித்து வீடு திரும்பிய ருச்சிகாவின் கணவர் குல்தீப் சேவானி, வீட்டின் முக்கிய கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்த்து சந்தேகமடைந்தார். மனைவியையும் மகனையும் அழைத்தும் பதில் வராததால், வீட்டு வாசல் மற்றும் படிக்கட்டுகளில் இரத்தக்கறைகள் இருப்பதும் கவனத்தில் கொண்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இரத்த வெள்ளத்தில் தாயும் மகனும்

போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, ருச்சிகா சேவானி படுக்கையின் அருகே தரையில் இரத்தம் உறைந்த உடலுடன் கிடந்தார். அவரது மகன் கிரிஷ், குளியலறையில் உயிரற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக இருவரின் உடல்களும் போஸ்ட்மார்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. ருச்சிகா, தனது கணவருடன் இணைந்து துணிக்கடை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமணம் ஆகி 2 மாதம் தான்! மனைவியை காரில் அழைத்து சென்று கணவன் செய்த கொடூர சம்பவம்! வெளிவந்த பதறவைக்கும் காரணம்...

கொலையுக்குப் பின்னால் உள்ள காரணம்

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகேஷ் என்ற 24 வயதுடைய இளைஞர், ருச்சிகா வீட்டில் வேலை செய்யவும் கடையில் ஓட்டுநராக பணியாற்றவும் செய்தவராக தெரியவந்தது. பீகாரைச் சேர்ந்த முகேஷ், அமர் காலனியில் வசித்து வந்தார். ருச்சிகா திட்டியதற்காக ஏற்பட்ட கோபத்தில், அவர் தாயையும் மகனையும் கொலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முகேஷ் மீது கொலை வழக்கு

தப்பி ஓட முயன்ற முகேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பான இரட்டைக் கொலைச் சம்பவம், லஜ்பத் நகர் பகுதியில் மட்டுமல்ல, முழு டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க பெற்ற தந்தையை தள்ளி விட்ட மகன்! அதிர்ச்சியில் மக்கள்! பகீர் சம்பவம்..