திருமண ஆசைகாண்பித்து 19 வயது இளம்பெண் பலமுறை பலாத்காரம்: பேரம் பேசிய கயவனுக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!

திருமண ஆசைகாண்பித்து 19 வயது இளம்பெண் பலமுறை பலாத்காரம்: பேரம் பேசிய கயவனுக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!



Viluppuram Court Direct 10 years Prison for Girl Rape Case

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், செம்மார் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் (வயது 30). கடந்த 2019ம் ஆண்டு வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக நடித்து, அவரிடம் தெரியுமான ஆசைகாண்பித்து பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார்.  

தொடர் அத்துமீறலால் பெண்மணி கர்ப்பமாகவே, தன்னை திருமணம் செய்யக்கூறி வினோத்தை வற்புறுத்தி இருக்கிறார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வினோத், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யப்போகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும், உனக்கு தேவையான பணத்தை வழங்குகிறேன் என பேரமும் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வினோத்தை கைது செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கின் இறுதி விசாரணை நிறைவுபெற்று நேற்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஹெர்மிஸ் குற்றவாளி வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், ரூ.5 இலட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.