ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
உதவி செய்ய போய் இப்படி ஆச்சே! தீமிதிக்க தயங்கி நின்ற பெண்!தூக்கிக் கொண்டு தீக்குழியில் இறங்கிய முதியவர்! இறுதியில் நடந்த பகீர் காட்சி....
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழா திடீர் விபத்தால் சோகத்தில் முடிந்தது. வழக்கம்போல ஆன்மிக உற்சாகத்துடன் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
தீமிதி விழா விபத்து
வேளாங்கண்ணி அருகே உள்ள வடக்கு பொய்கை நல்லூர் பிரசித்தி பெற்ற கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அங்கு ஒரு பெண் தீ மிதிக்க தயங்கியபோது, ஒரு முதியவர் அவரை தூக்கிக்கொண்டு செல்ல முற்பட்டார். அதற்குள் சமநிலையை இழந்து அந்தப் பெண்ணோடு தீக்குழியில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
தீக்குழியில் விழுந்த பெண்ணும் முதியவரும் பலத்த காயங்கள் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அய்யோ... சாவின் விளிம்புக்கு சென்று திரும்பியவர்கள்! பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்து 23 பேர் படுகாயம்! அலறி ஓடிய மக்கள்! பகீர் வீடியோ!
அதிர்ச்சியில் பகுதி மக்கள்
அந்த பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து அங்கு திரண்டு இருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்ற திருவிழா, எதிர்பாராத விதமாக விபத்தால் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி, விழாக்களில் பாதுகாப்பின் அவசியத்தை மேலும் வலியுறுத்தும் நிகழ்வாக மாறியுள்ளது.
#Watch | நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதிக்க தயங்கி நின்ற பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்லும்போது இருவரும் தீக்குழியில் விழுந்து படுகாயம்!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு… pic.twitter.com/TvyLMJ4agj
— Sun News (@sunnewstamil) September 26, 2025