மன்னிப்பு கேட்கமுடியாது.! சசிகலா பற்றி நான் அப்படி பேசவில்லை.! உதயநிதி ஸ்டாலின்.!

மன்னிப்பு கேட்கமுடியாது.! சசிகலா பற்றி நான் அப்படி பேசவில்லை.! உதயநிதி ஸ்டாலின்.!



udhayanithi stalin talk about edapadi palani sami

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக திமுகவும், அதிமுகவும் போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த, 5ம் தேதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, சசிகலாவை அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசியுள்ளார். பெண்களை புண்படுத்தும் வகையில் உதயநிதி பேசியதால் பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. 

udhayanithi

இந்த நிலையில், சசிகலா குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திவாகரன் மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த், உதயநிதி ஸ்டாலின் சசிகலா குறித்து அவதூறாக பேசியதை சுட்டிக் காட்டி அவர் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்தநிலையில், பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.