ஸ்பாவில் விபசாரத்தொழில்;  விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தலைமறைவு; 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!

ஸ்பாவில் விபசாரத்தொழில்;  விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தலைமறைவு; 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!



Trichy Vayalur Vijay Makkal Iyakkam Senthil Spa Centre Prostitution 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). அங்குள்ள கருமண்டபம், சிங்கராயர் நகர் பகுதியில் சொந்தமாக ஸ்பா நடத்தி வருகிறார். 

இவர் நடிகர் விஜயின் மக்கள் மன்றத்தில், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளரும் ஆவார். இவரின் ஸ்பாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேவி, லட்சுமி ஆகியோர் பணியமர்த்தப்பட்டதாக தெரியவருகிறது. 

trichy

மசாஜ் சென்டரில் விபச்சாரத்தொழில் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், அங்கு விபச்சார தடுப்பு பிரிவினர் களத்தில் இறங்கி ஸ்பாவுக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது, உரிமம் இல்லாமலேயே ஸ்பா நடத்தி வருவதும், ஸ்பாவுக்குள் ரகசிய அறை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததும் உறுதியானது. 

trichy

இதனையடுத்து, மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த மேலாளர், 2 பெண்களை அதிகாரிகள் கைது செய்தனர். ஸ்பாவின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதால், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.