இன்று 4 மாவட்டங்களை குளிர்விக்க காத்திருக்கும் மழை!!

இன்று 4 மாவட்டங்களை குளிர்விக்க காத்திருக்கும் மழை!!



Today rain for 4 districts

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில வாரங்களாகவே கன மழையானது இரவு நேரங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு என தகவல்.