இன்று முதல் அமைச்சரவைக்கூட்டம்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500..... CM விஜய் வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு..!!!



tn-first-cabinet-meeting-women-rights-allowance-discuss

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அரசின் ஆரம்பகட்ட செயல்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகள் மீது பொதுமக்களின் கவனம் திரும்பியுள்ளது.

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

சென்னையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு நிர்வாக மற்றும் நலத்திட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் அளித்த முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!

மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்து எதிர்பார்ப்பு

அதில் முக்கியமாக, பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான விவகாரம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது மாதந்தோறும் ₹2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நடைமுறை அமலாக்கம் குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.

அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு விவாதம்?

கடந்த ஆட்சிக் காலத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடுவது, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் தொடர்பான அம்சங்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகையில் தகுதியற்றவர்களின் பட்டியல் நீக்கம்..... இனி ரூ.2500 யாருக்கெல்லாம் கிடைக்கும்.? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!!