மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதிய உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.1,000 வரை கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 உயர்வு
அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கோரி வந்த நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 வரை கூடுதல் சம்பளம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு ஆசிரியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?
கௌரவ விரிவுரையாளர்களுக்கும் நன்மை
உயர்கல்வித்துறையில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.5,000 வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த சம்பள உயர்வு அறிவிப்புகள் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளன. அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... மாதம் ரூ.5,000 சம்பளம் உயர்வு! முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இன்பச் செய்தி!!!