பலாத்கார வழக்கில் ஜாமினில் வந்தா விட்டுடுவோமா? காமக்கொடூரன் பெண்ணின் தந்தை, சகோதரர்களால் வெட்டிக்கொலை?.. தரமான சம்பவம்.!

பலாத்கார வழக்கில் ஜாமினில் வந்தா விட்டுடுவோமா? காமக்கொடூரன் பெண்ணின் தந்தை, சகோதரர்களால் வெட்டிக்கொலை?.. தரமான சம்பவம்.!



TIRUVANNAMALAI MAN MURDER HE BAIL UNDER POCSO CASE

பள்ளி படிக்கும் தங்களின் மகளை சீரழித்த பேருந்து ஓட்டுனர் ஜாமினில் வெளியே வந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் வெட்டி சாய்க்கப்பட்ட தரமான சம்பவம் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு, பாண்டியன்பாக்கம் கிராமத்தைச் சார்ந்தவர் தணிகைமலை. இவரின் மனைவி ரேவதி. தம்பதிகளுக்கும் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களின் 16 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வயிற்று வலியால் அவர் துடித்துள்ளார். 

இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்ட போது, பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. விசாரணை செய்கையில் அதே ஊரைச் சார்ந்த பேருந்து ஓட்டுனர் முருகன் என்பவன் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததும், கொலை மிரட்டல் விடுத்து இதனை வாடிக்கையாக வைத்ததும் உறுதியானது. 

சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். முருகன் கடந்த 27ஆம் தேதி ஜாமினில் வெளியே எடுக்கப்பட்டார். சொந்த மனைவியே தனது கணவனை ஜாமினில் எடுத்த நிலையில், நிபந்தனை ஜாமினில் முருகன் வந்தது பெண்ணின் குடும்பத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து, தங்கள் வீட்டு பெண் மீது கைவைத்த நபருக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று முருகனின் வீட்டிற்கு சென்று பகிரங்க சவால் விட்டு வரப்பட்ட நிலையில், சம்பவத்தன்று காலை வயல்காட்டிற்கு சென்ற முருகன் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக முருகனின் மனைவி அளித்த புகாரின் பேரில், 16 வயது சிறுமியின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.