சிறுமியை ஹோட்டலில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 வாலிபர்கள்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

சிறுமியை ஹோட்டலில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 வாலிபர்கள்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!



three youngsters abused young girl

சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் சிறுமையை பல இடங்களில் தேடியும் சிறுமி காணாததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி, 2 நாட்களுக்கு பிறகு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி தன்னை 3 வாலிபர்கள் அழைத்துச் சென்று, ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெற்றோர்களிடம் அழுதுள்ளார் . இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

young girl

அவர்கள் அளித்த புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பாக மணி (26), கார்த்தி (23), செல்வராஜ் (23) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.