காதல் விவகாரத்தில் ஆவின் ஊழியர் 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை: திருவாரூரில் பரபரப்பு சம்பவம்.!

காதல் விவகாரத்தில் ஆவின் ஊழியர் 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை: திருவாரூரில் பரபரப்பு சம்பவம்.!



thiruvarur-aavin-worker-killed-by-gang-love-dispute

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், சேந்தங்குடியை சேர்ந்தவர் ராகுல். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். தற்போது ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று இரவில் மாங்குடியில் இருந்து ஆத்தங்குடி செல்லும் சாலையில் சடலமாக கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர், விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை சோதனை செய்தபோது, தலையில் வெட்டுக்காயம் இருந்ததால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

thiruvarur

இதற்கிடையில், ராகுலின் தந்தையும் காவல் நிலையத்தில் தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவரை கொலை செய்திருக்கக்கூடும் என புகார் அளித்தார்.

விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் ஆந்தக்குடி கிராமத்தை சேர்ந்த மருத்துவ மாணவியுடன் ராகுல் காதல் கொண்டுள்ளார். இதற்கு மாணவியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி காதலை கைவிட்டதாக தெரியவில்லை. 

இதனையடுத்து, மாணவியின் நெருங்கிய உறவினர் நந்தா @ வீரதமிழன், முருகேஷ், மணிகண்டன், நிர்மல் ஆகிய 4 பேர் கும்பலால் ராகுல் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாணவியின் தாய் கவிதாவிடம் விசாரணை நடந்து வருகிறது.