சுகமும் இல்லை... நடத்தையில் சந்தேகம்... கணவரை கொலை செய்த மனைவி பகீர் வாக்குமூலம்.!

சுகமும் இல்லை... நடத்தையில் சந்தேகம்... கணவரை கொலை செய்த மனைவி பகீர் வாக்குமூலம்.!



there-is-no-comfort-doubt-about-the-behaviorthe-confess

சென்னையில் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவியை காவல்துறை கைது செய்து இருக்கிறது. காவல்துறையிடம் அந்த பெண் பரபரப்பான வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

திண்டிவனம் அருகே உள்ள பாங்குளத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் தன்னைவிட 15 வயதில் மூத்த நபரை கோவில் சந்தித்து திருமணம் செய்து இருக்கிறார். அந்த நபருக்கு வருமானம் எதுவும் இல்லை. இந்தப் பெண் தனியார் கல்லூரி ஒன்றில் புதுமை பணியாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.

tamilnaduவேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததோடு மட்டுமல்லாமல் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்திருக்கிறார் அந்த கணவர். இதேபோல் சம்பவம் நடந்த தினத்தன்று அந்தப் பெண் தாமதமாக வீட்டிற்கு வந்ததால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அசிங்கமாக பேசி உள்ளார்.

tamilnaduஇதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கணவரை கீழே தள்ளி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணவர் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கணவரின் உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி  பீப்பாயில் வைத்து மூடிவிட்டு வீட்டிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை பள்ளிக்கரணையில் தனது தோழி வீட்டில் இருந்த அந்த பெண்ணை கைது செய்து இருக்கிறது. வருமானமும் இல்லை எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை  ஆனாலும் தொடர்ந்து  சந்தேகப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை என்றும் ஆத்திரத்தில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.