இது என்ன பித்தலாட்டமா இருக்கு! இது என்னோட கையெழுத்தே இல்ல... என்னோட விடைத்தாள் எங்கே போனது? இது வேற யாரோடதோ..... ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர்!!!



cbse-plus-two-physics-answer-sheet-confusion

சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுமதிப்பீட்டு நடைமுறையில் பெரிய குளறுபடி நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இயற்பியல் பாட விடைத்தாளுக்குப் பதிலாக வேறு ஒருவரின் தாள் தனது ரோல் எண்ணில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதிய ஆன்லைன் மதிப்பீட்டு முறையையே கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த புகார் பார்க்கப்படுகிறது.

மறுமதிப்பீட்டில் அதிர்ச்சி அடைந்த மாணவர்

2026-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு நடைமுறை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இயற்பியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் தனது விடைத்தாள் நகலை கோரி விண்ணப்பித்திருந்தார்.

தகவலின்படி, சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த அந்த நகலை பார்த்தபோது அவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். ஏனெனில், அதில் இருந்த கையெழுத்து மற்றும் எழுத்து முறை தனது எழுத்துடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே! ஒரு அப்பார்ட்மெண்ட் ரூ. 1.5 கோடி! ஆனால் பென்சிலுக்கு கூட தாங்காத சுவர்... வைரலாகும் சர்ச்சையான வீடியோ!

கையெழுத்து ஒப்பீட்டை வெளியிட்ட மாணவர்

தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, மாணவர் தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாட விடைத்தாள்களின் நகல்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த தாள்களில் உள்ள கையெழுத்து ஒன்றுபோல இருந்தாலும், இயற்பியல் தாளில் இருந்த எழுத்து முற்றிலும் வேறுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துகளின் வடிவம், சாய்வு, இடைவெளி என அனைத்தும் மாறுபட்டுள்ளதாகவும், இது சாதாரண தொழில்நுட்ப பிழை அல்ல என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், சிபிஎஸ்இ-யின் புதிய திரைவழி மதிப்பீட்டு முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விசாரணை நடத்த கோரிக்கை

“எனது உண்மையான விடைத்தாள் எங்கே போனது? யாருடைய பேப்பர் எனக்கு திருத்தப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ள அந்த மாணவர், இது வெறும் மதிப்பெண் பிரச்சினை அல்ல என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய விடைத்தாள் பரிமாற்றக் குளறுபடி என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து படித்த பிறகு இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது மனவேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அசல் விடைத்தாளை ஆய்வு செய்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் மாணவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: என்ன ஒரு மெத்தனம்! இப்படியா பன்றது... மூன்று நாட்களாக டிக்கெட் கொடுக்காமல் அலைக்கழிப்பு! பொறுமையிழந்த பயணி செய்த காரியம்.... அலறிய துடித்த பெண் ஊழியர்! வைரலாகும் வீடியோ..!!!