மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற புஷ்பா 2 படத்தின் பாடல்..!
25 வயது இளம்பெண்ணுடன், 22 வயது இளைஞன் கள்ளக்காதல்; நண்பன் துரோகியானதால் மாமாவுடன் சேர்ந்து கதைமுடித்த பயங்கரம்.!
25 வயது இளம்பெண்ணுடன், 22 வயது இளைஞன் கள்ளக்காதல்; நண்பன் துரோகியானதால் மாமாவுடன் சேர்ந்து கதைமுடித்த பயங்கரம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், சாமிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் அபுதாஹிர். இவரின் மகன் கபில் கான் (வயது 22). பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அரசு பணிகளுக்கு தயாராகி வருகிறார். அப்பகுதியை சேர்ந்த காதர் என்பவரின் மகன் முகமது சமீர் (வயது 19). கபிலும் - முகம்மதும் நண்பர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் பிரச்சனை எழுந்து, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கபில் கானை முகமது சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற கபிலை முகமது சமீர் மற்றும் அவரின் அக்கா கணவர் அலாவுதீன் (வயது 29) ஆகியோர் அழைத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது.
ஆத்திரத்தில் முகமது சமீர், அலாவுதீன் சேர்ந்து கபிலை கத்தியால் குத்தி கொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் துயினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து முகமது சமீர், அலாவுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பதைபதைப்பு தகவல் வெளியானது.
அலாவுதீன், தனது மனைவி ஷபானாவுடன் (வயது 25) சமீரின் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்திருக்கிறர். கபில் கான் - முகமது சமீர் நண்பர்கள் என்பதால், அடிக்கடி சமீரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, பணம் கொடுப்பது-வாங்குவது தொடர்பாக ஷாபனாவிடம் பேசி வந்த கபில் கானுக்கும் - ஷாபனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்கிடையே நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, பல இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அலாவுதீன் மற்றும் ஷாபனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
கள்ளக்காதல் ஜோடியை அனைவரும் கண்டிக்க, ஷாபனா - அலாவுதீன் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கபிலை கொலை செய்ய அலாவுதீன், முகமது சமீர் முடிவெடுத்து திட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.