தெலங்கானா என்கவுன்ட்டர் குற்றவாளிகளின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை!

தெலங்கானா என்கவுன்ட்டர் குற்றவாளிகளின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை!



thelungana encounter


தெலங்கானா என்கவுன்ட்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தது. 

Encounter

இதனையடுத்து குற்றவாளி 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாளை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யவும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் 4 பேரின் உடல்களும் நாளை காலை 9 மணியளவில் மறு பிரேத பரிசோதனையை செய்ய இருக்கின்றனர்.