லோன் தருவதாக ஒரேயொரு மெஸேஜ்: 7.18 லட்ட ரூபாயை ஆட்டையை போட்ட மர்ம நபர்..!

லோன் தருவதாக ஒரேயொரு மெஸேஜ்: 7.18 லட்ட ரூபாயை ஆட்டையை போட்ட மர்ம நபர்..!


theft-lakhs-of-rupees-from-a-farmer-in-thanjavur

தஞ்சை மாவட்டம், புதுக்குடி அருகிலுள்ள தெற்கு நண்டாம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சையா மகன் மனோகரன். இவர் ஒரு விவசாயி. இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உங்களுக்கு ரூபாய் பத்து லட்சம் கடன் வழங்கப்பட உள்ளது எனவும் மேலும் விவரங்களுக்கு குறிப்பிட்ட செல்போனினை தொடர்பு கொள்ளவும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்ட மனோகரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தொடர்பில் பேசிய நபர் உங்களுக்கு ரூபாய் பத்து லட்சம் கடன் தொகை கிடைக்கும் என்றும் அதற்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய மனோகரன் பல தவணைகளாக மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூபாய் 7 லட்சம் 18 ஆயிரத்து 900 செலுத்தியுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பணம் தன்னுடைய வங்கி கணக்கிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மனோகரன் மர்ம நபரின் செல்ஃபோன் எனக்கு மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் மனோகரனுக்கு தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மணப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், கூடுதல் காவல் ஆய்வாளர் சுவாமிநாதன் துணை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.