வேலைக்கு சென்று வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!



Theft in Thirupur

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அல்லாளபுரம் செல்லும் ஊரில் வசித்து வருபவர் நடராஜன். இவர் மற்றும் இவரது மனைவியை இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் கம்பெனிக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அடையலாம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது இரண்டு மர்ம நபர்கள் இரும்பு கம்பியுடன் முகமூடி அணிந்து வீட்டை உடைக்க முயற்சி செய்தது பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.