அடப்பாவி.. பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் மெஷினை உடைத்த இளைஞர்; கம்பி எண்ணும் பரிதாபம்.!!

அடப்பாவி.. பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் மெஷினை உடைத்த இளைஞர்; கம்பி எண்ணும் பரிதாபம்.!!



the-youth-broke-the-atm-machine-in-rage-of-not-getting

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாரதிசாலை - சில்வர் பீச் பகுதியில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையில் இருக்கும் இந்த ஏடிஎம் பொதுமக்கள் எப்போதும் வந்து சென்றபடி இருப்பார்கள். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் ஏடிஎம் மையம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

கடலூர்

இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஏடிஎம் இயந்திரத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.