அசால்டாக காரில் வலம் வந்த கொள்ளையர்கள்.. டார்ச் அடித்து கொள்ளை அரங்கேற்றிய பரபரப்பு சம்பவம்..!

அசால்டாக காரில் வலம் வந்த கொள்ளையர்கள்.. டார்ச் அடித்து கொள்ளை அரங்கேற்றிய பரபரப்பு சம்பவம்..!



the-robbers-who-crawled-in-the-car-as-an-assault

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அடுத்தடுத்து  5 வீடுகளில் டார்ச் அடித்து பார்த்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் காமராஜ் நகரில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் மற்றும் கிறிஸ்மஸ் அன்று தேவாலயம் சென்றவர்களின் வீடுகளை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

மேலும் கொள்ளையடிப்பதற்காக வீடுகளின் அருகில் சென்று டார்ச் அடித்து நோட்டமிடும் காட்சியும், கேமரா அருகில் செல்லும் போது கால்களை சாய்த்தவாறு நடந்து செல்லும் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

robbers

இந்நிலையில் இந்த பகுதிகளில் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் திருட்டுப் போன நிலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.