சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
நடத்தை தவறிய காதல் மனைவி.. நேரில் கண்ட கணவனின் வெறிச்செயல்..!
கோவை மாவட்டம் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் கணேசன் - நிவேதா தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. மேலும் இவர்களின் பழக்கமானது நிவேதாவின் கணவர் கணேசனுக்கு தெரிய வரவே அவர் மனைவி நிவேதாவை கடுமையாக கண்டித்துள்ளார்.

ஆனாலும் நிவேதா முருகேசனிடம் பழகுவதை நிறுத்தவில்லை. மேலும் நேற்று மாலை பணி முடிந்து கணேசன் வீடு திரும்பிய போது நிவேதாவும் முருகேசன் தனிமையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கணவர் கணேசன் அங்கிருந்த கத்தியால் சரமாரியாக நிவேதாவின் உடல் முழுவதும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து நிவேதாவின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது நிவேதா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நிவேதாவின் கணவர் கணேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.