குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் கிடந்த நாயின் சடலம்.... அதிர்ச்சியில் கிராம மக்கள்...!

குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் கிடந்த நாயின் சடலம்.... அதிர்ச்சியில் கிராம மக்கள்...!



The dead body of the dog lying in the overhead water tank.... Villagers in shock...

கிராம மக்கள் புழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் கிடந்ததால், அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் கிடந்தது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடிநீர் சுத்தம் செய்யும் பணிக்காக இரண்டு நாட்களாக குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் குடிநீர் தொட்டியில் இறந்த நாயை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து நாயை கொன்று குடிநீர் தொட்டிக்குள் போட்டவர்கள் யார் என்பது குறித்து சிவகாசி எஸ்.பி. தனஜெயன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் குடிநீர் தொட்டி அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.