போடு வெடிய... அனைவருக்கும் தீபாவளி பரிசு! சற்றுமுன் தமிழக அரசு அறிவித்த ஹாப்பி நியூஷ்!!!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பண்டிகை கால செலவுகளை சமாளிக்க ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வழங்கப்படும் முன்பணத் தொகையை ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து 10 சம தவணைகளாக பிடித்தம் செய்யப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் ஒரே தவணையாக பெரிய தொகை பிடித்தம் செய்யப்படாமல், படிப்படியாக திரும்ப செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
ரூ.20,000 பண்டிகை முன்பணம்
அரசின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகை காலத்தில் ஏற்படும் கூடுதல் குடும்பச் செலவுகளுக்கு இந்த முன்பணம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு
முன்னதாக, தவெக அரசு அமைந்த பிறகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுபோன்ற பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போதைய மாநில பட்ஜெட்டிலேயே இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பண்டிகை முன்பணம் கிடைப்பது டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மாதாந்திர தொகை உயர்வு... அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!!!