கடலூர், ஈரோடு, தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
கடலூர், ஈரோடு, தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
பெரம்பலூர், நாகை, விருதுநகர், இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.