தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை சற்றுமுன் அறிவித்த தமிழக அரசு!! எதெற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ..

தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளை சற்றுமுன் அறிவித்த தமிழக அரசு!! எதெற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ..


Tamil nadu new lockdown rules from june 14th

தமிழகத்தில் நாளை முதல் வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு முதல் பல்வேறு தளர்வுகளை இந்தமுறை அறிவித்துள்ள தமிழக அரசு, தற்போது மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி,

1. நாளை முதல் தமிழகத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேநீர்கடைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் இந்த நடைமுறைக்கு அனுமதி இல்லை.

2. கட்டுமான நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

3. அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

4. இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது