வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்..! வாசலில் அமர்ந்திருந்த மகன்..! வௌவௌத்துப் போன போலீசார்..!

வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்..! வாசலில் அமர்ந்திருந்த மகன்..! வௌவௌத்துப் போன போலீசார்..!



Son killed mom like ram tamil movie

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆபுத்திரன் என்னும் பகுதியை சேர்ந்தவர் 70 வயதாகும் விமலா. இவர் மனநலம் குன்றிய அகிலன் என்ற தனது மகனுடன் வசித்துவந்துள்ளார். இவர்களுக்கு 4 வீடுகள் இருக்கும் நிலையில் அதில் இருந்து வரும் வாடகை பணத்தை வைத்து  குடும்ப செலவுகளை சமாளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விமலா வீட்டின் மாடியில் குடியிருந்த மார்ட்டின் என்பவர் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். மார்ட்டின் வீட்டை காலி செய்து நீண்ட நாட்களாகியும் முன்பணம் வராததால் மார்டினின் தந்தை விமலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வாசலில் அமர்ந்திருந்த அகிலன், அம்மாவை பார்க்க முடியாது, அவர் செத்துட்டார் என கூறியுள்ளார். மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விமலாவின் வீட்டிற்கு வந்த போலீசாரை உள்ளே அனுமதிக்காமல் அகிலன் தடுத்துள்ளார்.

Crime

நீண்ட புறத்திற்கு பிறகு போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது விமலா தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மனநலம் சரியில்லாத அகிலன் தனது அம்மாவை கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

ராம் பட பாணியில் அம்மாவின் சடலத்தை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு மனநலம் சரியில்லாத மகன் சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.